ADDED : மார் 09, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் தனியார் பள்ளியில் நடந்தது.
அரிமா சங்க பட்டய தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன தலைவர் பாலா வரவேற்றார். மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் மணிகண்டன், டாக்டர் சீனிவாசன் தொடங்கி வைத்தனர். அரிமா சங்க நிர்வாகிகள் பூசைதுரை, இம்மானுவேல் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பணி நியமனம் பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

