ADDED : ஏப் 18, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு தேர்வு நடத்தினர். இளங்கலை முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் 1695 பேர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலர் நிரஞ்சனி ஒருங்கிணைத்தார்.
