ADDED : ஏப் 22, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் அரசு உதவி பெறும் பிரிவுகள், சுயநிதி பிரிவுகளில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. ஏழு தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்வில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 90 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் பணி ஆணை வழங்கினார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஷ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி ஒருங்கிணைத்தனர்.
