ADDED : மார் 05, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை டாடா பார்டன்ஸ் நிறுவனத்தின் வளாகத்தேர்வு கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிறுவன அதிகாரிகள் பிரதீப் ராஜ், வீரபத்திரன், சுரேஷ், சிலம்பரசன், ஆகியோர் தேர்வினை நடத்தினர்.
22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் சகாதேவன், துறைத்தலைவர்கள் பிரேம்குமார், ஜெயலட்சுமி செய்திருந்தனர்.

