ADDED : நவ 05, 2025 01:08 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: வைகை அணை நீர் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு செல்லும் நிலையூர் கால்வாயில் விளாச்சேரி - பெருங்குடி வரை நபார்டு நிதி உதவி திட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் ரூ.6.50 கோடியில் பல்வேறு கட்டங்களாக சீரமைப்பு பணி நடக்கிறது.
சந்திராபாளையத்திலிருந்து ஹார்விபட்டி செல்லும் வழியில் சேதமடைந்த பழமையான தரைப்பாலம் அகற்றப்பட்டு புதிய தரைப்பாலம், நெடுங்குளம் கண்மாய் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணிகளை பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், உதவி பொறியாளர்கள் சுந்தரமூர்த்தி, கோவிந்தராஜ் உடன் சென்றனர்.
