ADDED : ஜன 16, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சேது பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மாணவர்களிடம் பேசுகையில், ''பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுப்புறத்தை பசுமையாகவும் துாய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லுாரி சுற்றுச்சூழல் சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

