ADDED : பிப் 17, 2026 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் விளையாட்டு உபகரணங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் திட்டத்தை புதுக்கோட்டையில் துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
மேலுாரில் நடந்த விழாவிற்கு அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காப்பீடு அட்டையை வழங்கி, விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் செயலாளர் முகமது யாசின், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

