நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் லுார்தன்னை சர்ச்சின் 106ம் ஆண்டு பெருவிழாவின் நவநாளையொட்டி நேற்று சேலம் மறைமாவட்ட குழந்தை இயேசு சர்ச்சின் பாதிரியார் ஜோசப் பெர்னார்ட் தலைமையில் திருப்பலி நடந்தது.
பாதிரியார் ஜார்ஜ், உதவிப் பாதிரியார்கள் பாக்கியராஜ் பிரபு, அஜிலாஸ், கன்னியாஸ்திரிகள் முன்னிலை வகித்தனர். மறையுரையின்போது நற்கருணை, அர்ப்பணிப்பை பின்பற்றி வாழ வேண்டும் என பாதிரியார்கள் வலியுறுத்தினர். இதன் பின் திவ்விய நற்கருணை பவனி மாதா கோயில் மெயின் ரோடு பாரதியார் மெயின் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக சர்ச்சில் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை சர்ச் பொறுப்பாளர்கள், இளையோர் பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

