ADDED : அக் 17, 2025 02:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: கோமதிபுரத்தில் சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மைய செயற்குழு, நிறுவனர் பதி தலைமையில் நடந்தது.
செயலாளர் கணேசன் வரவேற்றார். மாநில நெடுஞ்சாலைகளில் 'பாஸ்டேக்'கின் ரூ.3000 ஆண்டு பாஸ் செல்லாதது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலமடை பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும். சிவகங்கை ரிங் ரோடு வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் இந்திராபதி, தினேஷ், செல்லச்சாமி, சோபாராணி, இசக்கி, காயத்ரி, அலமேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
