நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் (டான்ராக்டா) மாவட்ட தலைநகரங்களில் செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். வக்புவாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிர் தலைமையில் பேராசிரியர்கள் சேதுராக்காயி, சண்முகவேல் ஆகியோர் அடங்கிய குழு தேர்தலை நடத்தியது.
இதன்படி 2005 - - 2028 க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராமமூர்த்தி, செயலாளராக பெரியதம்பியும், பொருளாளராக சந்திரன், துணைத் தலைவராக அனார்கலி, இணைச் செயலாளராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பெதுக்குழுவுக்கு பேராசிரியர்கள் பெருமாள், ராஜேந்திரன், சண்முகசுந்தரம், அனார்கலிபீவி, சுந்தரராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

