sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கணவர் இறந்ததால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய், மகள் பலி: சிகிச்சையில் மகன் * கணவர் இறந்ததால் விரக்தி

/

கணவர் இறந்ததால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய், மகள் பலி: சிகிச்சையில் மகன் * கணவர் இறந்ததால் விரக்தி

கணவர் இறந்ததால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய், மகள் பலி: சிகிச்சையில் மகன் * கணவர் இறந்ததால் விரக்தி

கணவர் இறந்ததால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய், மகள் பலி: சிகிச்சையில் மகன் * கணவர் இறந்ததால் விரக்தி


ADDED : ஏப் 19, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் கணவர் இறந்த 6 மாதங்களில் வறுமை காரணமாக மகன், மகளுடன் தாய் விஷம் குடித்தார். இதில் தாயும், மகளும் இறந்துவிட மகன் சிகிச்சையில் உள்ளார்.

மதுரை அனுப்பானடி தாய் நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். மனைவி ஜீவகுமாரி 38, மகள் இன்பலட்சுமி 13, மகன் தனசிங்கப்பெருமாள் 10. மகள் 8 ம் வகுப்பும், மகன் 5ம் வகுப்பும் படித்து வந்தனர். ஆறு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் ஜெயராமன் இறந்தார்.

இதனால் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஜீவகுமாரிக்கு சிரமம் ஏற்பட்டது. சிலரிடம் கடன் வாங்கி சமாளித்தார்.

இருப்பினும் வறுமை வாட்டியதால் நேற்றுமுன்தினம் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். மூவரும் மயங்கினர்.

நேற்று காலை அருகில் வசிப்பவர்கள் சந்தேகப்பட்டு கதவை திறந்து பார்த்தபோது ஜீவகுமாரியும், இன்பலட்சுமியும் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடிய தனசிங்கப்பெருமாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us