நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மானாவாரி பகுதிகளில் விவசாயிகள் சோளம் விதைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: தற்போது சோளத்திற்கு கிலோ ரூ.45 முதல் ரூ. 50 வரை விலை கிடைக்கிறது. 90 முதல் 100 நாட்களில் அறுவடை செய்து விடலாம்.  தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தால் போதும். கோடையில் ஒரு மழை பெய்தால் நன்கு விளைந்து விடும்.  பூச்சி, நோய் தாக்கம் இல்லை. உரச்செலவு, கூலி ஆட்கள் செலவு இல்லை. சோள  தட்டைகள் கால்நடைகளுக்கு உணவாகிறது. அதனால் இந்தாண்டு சோளம் விதைத்து வருகிறோம்  என்றனர்.

