sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

/

'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

'ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 09, 2025 05:21 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி, : 'நகராட்சி பகுதியில் ஊர்வலம் செல்லும்போது பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உசிலம்பட்டி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

உசிலம்பட்டி தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், கல்வித்துறை, நகராட்சி, தேசிய நெடுஞ்சாலை, பாங்க் அலுவலர்கள் தொடர்ந்து கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் கூட்டத்திற்கு வர தாசில்தார் உத்தரவிட வேண்டும்.

சந்தை திடலுக்குள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கால்வாய்கள் துார் வாரப்படாமல், ரோடு செப்பனிடப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பணிகளும் நடக்கவில்லை.

சந்தை யாருக்கு என்பதில் நகராட்சி, ஒன்றியத்திற்கு இடையே தீர்வு காணப்படாமல் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் பணிகள் நடக்கவில்லை என பதில் கொடுக்கப்படுகிறது.

வழக்கு இருந்தால் சுகாதாரப்பணிகளை நடத்தக்கூடாது என எதுவும் உள்ளதா என கேள்வி எழுப்பினர். 'ஒன்றிய, நகராட்சி கமிஷனர்களிடம் பேசி தீர்வு காணப்படும்' என தாசில்தார் தெரிவித்தார்.

நல்லொச்சான்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாயை ஆக்கிரமித்து கம்பிவேலி போட்டுள்ளனர். இதனை அப்புறப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பலருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை.

நகராட்சி பகுதியில் நடைபெறும் ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் போலீசார் முன்பே பட்டாசு வெடிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பேசினர்.






      Dinamalar
      Follow us