sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மத்திய அரசை கண்டித்து விவ​சா​யிகள் யாத்திரை; மாநில முதல்வர்களிடம் ஆதரவு திரட்ட முடிவு

/

 மத்திய அரசை கண்டித்து விவ​சா​யிகள் யாத்திரை; மாநில முதல்வர்களிடம் ஆதரவு திரட்ட முடிவு

 மத்திய அரசை கண்டித்து விவ​சா​யிகள் யாத்திரை; மாநில முதல்வர்களிடம் ஆதரவு திரட்ட முடிவு

 மத்திய அரசை கண்டித்து விவ​சா​யிகள் யாத்திரை; மாநில முதல்வர்களிடம் ஆதரவு திரட்ட முடிவு


ADDED : பிப் 09, 2026 05:56 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 19ல் டெல்லியில் விவ​சா​யிகள் பேரணி நடத்தவுள்ளதாக ஐக்கிய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, நீதிபதி நவாப்சிங் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுதல், வேளாண் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை செல்ல உள்ளனர்.

மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் பேசியதாவது:

மத்திய அரசால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களின் ஒப்புதலோடு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இன்று (பிப். 9) சென்னையிலும், பிப்.10ல் சேலத்திலும் விவசாயிகள் மகாசபைக் கூட்டம் நடக்க உள்ளது. அடுத்து கர்நாடகாவுக்குள் யாத்திரை செல்ல உள்ளோம்.

தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கிடைத்தால் இன்று சந்திப்போம். மற்ற மாநில முதல்வர்களையும் சந்தித்து மத்திய அரசுக்கு எதிராக ஆதரவு திரட்டுவோம். மார்ச் 19ல் டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் பல லட்சம் விவ​சா​யிகள் பங்​கேற்​கும் யாத்திரை நிறைவுபெறும் என்றார்.

தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் குறுபுறு சாந்தகுமார், தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அபிமன்யூ, தமிழக தலைவர் அய்யாகண்ணு, ஆதிமூலம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us