ADDED : ஜூன் 25, 2026 03:01 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டுபயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக அரசு சார்பில் ரூ.75 ஆயிரம் உச்சவரம்புக்குள் கடன் பெற்ற விவசாயிகளுக்குமட்டுமே முழுமையாக கடன் தொகை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதற்கு மேல் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பெரும்பாலானோர் அரசு அறிவித்த உச்சவரம்பு தொகைக்கு அதிகமாகவே கடன் பெற்றுள்ளனர்.
இதனால் பெரும் பாலான விவசாயிகளுக்கு பலனில்லை எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விவசாய சங்கத் தலைவர் அழகுமலை, யாகூப் கான், மார்நாட்டான், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
