நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா விவசாயிகள் டி.கல்லுப்பட்டியில் 10 நிமிட சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.
அவர்கள் கூறியதாவது: வேலாம்பூர், வையூர் பகுதிகளில் பட்டாசு ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2024--25ம் ஆண்டுக்கான ராபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டில் குளறுபடி இல்லாமல் விவசாயிகளை ஏமாற்றாமல் நியாயமான முறையில் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ரெட்டிரப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்றனர். 44 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

