/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள் நடவுக்கு காத்திருக்கும் நெல் நாற்றுகள்
/
மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள் நடவுக்கு காத்திருக்கும் நெல் நாற்றுகள்
மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள் நடவுக்கு காத்திருக்கும் நெல் நாற்றுகள்
மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள் நடவுக்கு காத்திருக்கும் நெல் நாற்றுகள்
ADDED : நவ 01, 2025 03:02 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி பகுதிகளில் நடவு செய்வதற்கு நெல் நாற்றுகள் தயாராகி விட்டன. மழையை எதிர்நோக்கி ஏராளமான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தென்பழஞ்சி விவசாயிகள் சிவராமன், வேல்முருகன் கூறியதாவது: இந்தாண்டு பருவமழை துவங்கவில்லை. கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர். குறைவாக தண்ணீர் உள்ள விவசாயிகள் பாதி நடவு செய்து மீத நாற்றுக்களை நாற்றாங்காலிலேயே விட்டுள்ளனர்.
மழையை நம்பியுள்ள விவசாயிகள் 20 நாட்களுக்குமுன்பு நாற்று பாவி உள்ளனர். தற்போது நடவுக்கு நாற்றுகள் தயாராகி விட்டன. ஆனால் மழை துவங்கவில்லை.
நாற்றுப் பாவிய 25 முதல் 30 நாட்களுக்குள் நடவு செய்து விட வேண்டும். இல்லையென்றால் நாற்றுகள் முற்றிவிடும். அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகத்தான் பயன்படுத்த முடியும். பத்து நாட்களுக்குள் மழை துவங்கினால் மட்டுமே பணிகளை துவக்க முடியும். நடவு செய்தபின்பு மழை பெய்யாவிடில் நட்ட நாற்றுகள் கருகி வீணாகும். மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றனர்.

