நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்கம் சார்பில் உழவாரப்பணி நடந்தது.
சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சத்ய சாயி சேவா சமிதி தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.
சன்மார்க்க சங்கம், சேவா சமிதி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று உழவாரப்பணி செய்தனர். கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.