/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் பலி
/
மதுரை அருகே கண்மாயில் மூழ்கி தந்தை, மகன் பலி
ADDED : அக் 27, 2024 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாயில் குளித்த தந்தை, மகன் நீரில் மூழ்கி பலியாகினர்.
சோழவந்தான் அருகே மேல மட்டையான் அழகர் 32, கூலி தொழிலாளி, மனைவி அங்கம்மாள், 9 மற்றும் 7வயதில் இரு மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். கீழ மட்டையான் கிராம புரட்டாசி பொங்கல் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றனர்.
அக்.,24ல் மகன் ஜெகதீஷ்வரனை அழைத்து கொண்டு அப்பகுதி கண்மாய்க்கு குளிக்க சென்ற அழகர் வீடு திரும்பவில்லை. அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை கண்மாய் பகுதியில் அழகர், ஜெகதீஸ்வரன் சடலங்கள் மிதந்தன. அவற்றை காடுபட்டி போலீசார் மீட்டனர்.