/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாயில் குளிக்க சென்ற தந்தை, மகன் மூழ்கி பலி
/
கண்மாயில் குளிக்க சென்ற தந்தை, மகன் மூழ்கி பலி
ADDED : அக் 27, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேல மட்டையான் கிராமத்தை சேர்ந்தவர் அழகர், 32; கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி அங்கம்மாள், 9, மற்றும் 7 வயதில் இரு மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.
கீழமட்டையான் கிராம புரட்டாசி பொங்கல் விழாவிற்கு, குடும்பத்துடன் சென்றனர்.
அக்., 24ல் மகன் ஜெகதீஷ்வரனை அழைத்துக் கொண்டு அப்பகுதி கண்மாய்க்கு குளிக்க சென்ற அழகர், வீடு திரும்பவில்லை. கண்மாய் முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை கண்மாய் பகுதியில் அழகர், ஜெகதீஸ்வரன் சடலங்கள் மிதந்தன. அவற்றை காடுபட்டி போலீசார் மீட்டனர்.