/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தையை கொன்ற தந்தை கைது காணாமல் போனதாக நாடகமாடியவர் காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்
/
குழந்தையை கொன்ற தந்தை கைது காணாமல் போனதாக நாடகமாடியவர் காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்
குழந்தையை கொன்ற தந்தை கைது காணாமல் போனதாக நாடகமாடியவர் காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்
குழந்தையை கொன்ற தந்தை கைது காணாமல் போனதாக நாடகமாடியவர் காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்
ADDED : ஆக 28, 2025 02:18 AM

திருமங்கலம்,:திருமங்கலத்தில் குழந்தையை அடித்துக் கொலை செய்து மூட்டையில் கட்டி வைத்து, காணாமல் போனதாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரை சேர்ந்தவர் பாண்டி செல்வம், 25. இவரது மனைவி வனிதா, 24. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது.
குடும்ப தகராறு பாண்டி செல்வம் கப்பலுார் சிட்கோவில் கட்டட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார். இவரது மனைவி விருதுநகர் பகுதி தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்கிறார்.
குடும்பத் தகராறு காரண மாக ஒரு மாதமாக கணவன் -- மனைவி இருவரும் தனித்தனியே வசிக்கின்றனர். குழந்தை பார்கவியை வனிதா, தான் வேலை பார்க்கும் தீப்பெட்டி கம்பெனிக்கு உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.
ஆனால், தீப்பெட்டி கம்பெனிக்கு அழைத்துச் சென்றால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, பாண்டி செல்வம் குழந்தையை தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து சென்று வந்தார்.
இரவு நேரத்தில் குழந்தை தன் தாயோடு இருந்தது. கடந்த 25ல் தனது குழந்தையோடு பாண்டி செல்வம் வேலைக்கு வந்தார்.
காலை 11:00 மணிக்கு கணவன் - மனைவி இடையே மொபைல் போனில் பேசிய போது, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குழந்தை பார்கவி அழுதது.
ஆத்திரமடைந்த பாண்டி செல்வம், குழந்தையை அடித்து அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை இறந்தது தெரிந்தது.
இதையடுத்து, குழந்தையை மாவு பொருட்கள் பேக்கிங் செய்யும் சாக்கு மூடையில் கட்டி, இயந்திரத்தின் அடியில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். குழந்தையை காணவில்லை என போலீசிலும் புகார் அளித்தார்.
துர்நாற்றம் நேற்று அதே கம்பெனியில் வேலை செய்யும் முத்துக்குமார் என்பவர், இயந்திரத்தை ஓட்ட முயன்ற போது துர்நாற்றம் வீசியது. அங்கே மூட்டை இருந்ததால், போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
திருமங்கலம் நகர் போலீசார் மூட்டையை திறந்து பார்த்தனர். உள்ளே குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. குழந்தையை கொலை செய்ததை பாண்டி செல்வம் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.