ADDED : மார் 06, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
மதுரை: வேளாண் துறை சார்பில் கோடை உழவுக்கான விதைநெல், உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை மேற்கு, செல்லம்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளில் கிணற்றுப்பாசன முறையில் 10ஆயிரம் ஏக்கரில் கோடை உழவுப்பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான விதைகள் 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் விற்கப்படுகிறது.
தனியார் உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 3103 டன் யூரியா இருப்பில் உள்ளது.
மேலும் 1210 டன் டி.ஏ.பி., 730 டன் பொட்டாஷ், 3856 டன் காம்ப்ளக்ஸ், 568 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண் இணை இயக்கு நர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.
