ADDED : பிப் 13, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் தீயணைப்பு நிலையத்தில் தனியார் செக்யூரிட்டிகளுக்கு தீயணைப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். அவசர காலங்களில் தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்துதல், முதலுதவி சிகிச்சையளித்தல், அப்பார்ட்மென்டுகளில் தீ விபத்தின் போது, ஸ்ட்ரெச்சர் இல்லாத போது செயல்படும் முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சான்றிதழ் வழங்கப்பட்டது.
