/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வடக்கு தாலுகாவுக்கு தல்லாகுளத்தில் இடம்
/
வடக்கு தாலுகாவுக்கு தல்லாகுளத்தில் இடம்
ADDED : பிப் 13, 2024 04:26 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் வடக்கு தாலுகாவிற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு, தல்லாகுளம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் 75 சதவீதம் மாநகராட்சி பகுதியை கொண்டுள்ளதால் மக்கள் வருகைக்கேற்ப வசதியாக இல்லை. தற்போதைய கட்டடத்தை இடித்துவிட்டு அனைத்து வசதிகளுடன் ரூ.4 கோடியில் புதிதாக கட்ட முடிவு செய்தனர். தற்போது அதற்கு பதிலாக தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில், நுாறாண்டு பழமையான கட்டடத்தில் இயங்கும் மதுரை வருவாய் கோட்ட அலுவலகமும் (ஆர்.டி.ஓ.,) அதே பகுதிக்கு இடம் பெயர உள்ளது. இரு அலுவலகங்களும் தலா 50 சென்ட் வீதம் அமைய உள்ளன.
வருவாய் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை அலுவலர் உட்பட பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அவை ஒரே இடத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வருவதற்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.