ADDED : ஜன 02, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: கல்லுப்பட்டி பேரூராட்சியின் துாய்மை பணியாளர்கள் மதுரை ரோட்டில் டிராக்டர் மூலம் துாய்மைப்பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் துாய்மை பணியாளர்கள் மகாலிங்கம் 31, பூங்காவனம் 55, காளிமுத்து 39, சின்னத்தாயி 55, ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
லாரி டிரைவர் மதுரை அண்ணாநகர் ஆல்பர்ட்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.-

