sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மணமான அக்கா காதலன் கொலை தலையை துண்டித்த தம்பி

/

மணமான அக்கா காதலன் கொலை தலையை துண்டித்த தம்பி

மணமான அக்கா காதலன் கொலை தலையை துண்டித்த தம்பி

மணமான அக்கா காதலன் கொலை தலையை துண்டித்த தம்பி


ADDED : பிப் 01, 2024 01:52 AM

Google News

ADDED : பிப் 01, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்:மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்த நந்திபெருமாள் மகன் சதீஷ்குமார், 28, கட்டடங்களுக்கு கம்பி கட்டும் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் அழகுமலை மகள் மகாலட்சுமி, 23. இருவரும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மகாலட்சுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரே வாரத்தில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்றோர் வீட்டிற்கு மகாலட்சுமி திரும்பி வந்து விட்டார்.

அதன் பின், தொடர்ந்து சதீஷ்குமாரிடம் போனில் பேசி வந்தார். இதை மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், 20, கண்டித்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சதீஷ்குமார் சென்றபோது, அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடியை துாவி, அரிவாளால் பிரவீன்குமார் வெட்டியதில் தலை துண்டானது.

துண்டித்த தலையை ஊர் மந்தை மேடையில் பிரவீன்குமார் வைத்தார். அப்போதும் ஆத்திரம் குறையாதவர் வீட்டிற்கு சென்று, மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தடுத்த தாய் சின்ன பிடாரியின் கையை துண்டாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us