ADDED : நவ 20, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை தானம் அறக்கட்டளையின் வைகை வட்டார களஞ்சியம் சார்பில் ஒத்தகடையில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடந்தது.
பாரத ஸ்டேட் வங்கி ஒத்தகடை கிளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடுகளை செய்தன. வங்கி கிளை மேலாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.
டாக்டர் நுாருல் ஹதியா தலைமையில் 151 பேருக்கு கண் பரிசோதனை நடந்தது. அதில் கண்புரை பாதிப்புள்ள 30 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தனர்.