ADDED : டிச 21, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் மனநலன் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, மதிச்சியம் ராமையா தெரு மாநகராட்சி கட்டடத்தில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கி வருகிறது.
தற்போது இம்மையத்தில் அச்சகம், பேக்கரி மற்றும் தையல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் ஜன.8க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

