ADDED : செப் 13, 2025 04:32 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சி குறிஞ்சிநகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடந்தது.
டாக்டர் சுப்புலட்சுமி தலைமையில் மருத்துவக் குழுவினர் 50 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை நடத்தினர். முகாமை வீரமணி, சித்ரா, ராதிகா ஒருங்கிணைத்தனர்.
