ADDED : பிப் 07, 2024 07:09 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிக காட்சிக்கூடம் திறப்பு விழா நடந்தது.
முதன்மை காட்சிக்கூட பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வசதியாக இந்திய விடுதலை இயக்கம் மற்றும் காந்தியடிகள் குறித்த காட்சிக்கூடம் வினோபா ஜோதி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய காட்சிக்கூடத்தை மியூசியம் துணைத் தலைவர் ஜவஹர் பாபு திறந்து வைத்தார். தியாகி அழகம்பெருமாள், மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில் குமார், காப்பாட்சியர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
