ADDED : மார் 17, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி  திருவிழா கொடியேற்றத்திற்கு மறுநாள் 1ம் திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி,  தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு  நேற்று விநாயகர் திருவிழா நடந்தது. விநாயகருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் புறப்பாடாகினார்.
நட்சத்திர கணக்கின்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை  கொடியேற்றத்திற்கு மறுநாள் விநாயகர் திருவிழா வருவது வழக்கம். கடந்த ஆண்டும் கொடியேற்றத்திற்கு மறுநாள் விநாயகர் திருவிழா நடந்தது. இன்று (மார்ச் 17) முதல் மார்ச் 30 வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

