ADDED : மார் 17, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சி வாசன் நகரில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது.
இங்கு பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் காரடையான் நோன்பை (சாவித்திரி விரதம்) முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி வழிபட்டனர். சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதம், வழிபாடு நடந்தது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

