sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்

/

 'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்

 'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்

 'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்


ADDED : மார் 14, 2026 07:01 AM

Google News

ADDED : மார் 14, 2026 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் காஸ் வினியோகம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., அன்பழகன், மருத்துவ கல்லுாரி டீன் அருள்சுந்தரேஷ்குமார், மாவட்ட வினியோக அலுவலர் ராஜகுரு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வன், அங்கன்வாடி திட்ட அலுவலர் ஷீலாராணி மற்றும் காஸ் வினியோகஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 3 பிரதான எண்ணெய் நிறுவனங்கள் இயங்குகின்றன. 68 முகவர்கள் காஸ் சப்ளை செய்கின்றனர். மாவட்ட அளவில் 16 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் உள்ளன. நாளொன்றுக்கு 21 ஆயிரத்து 212 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் 3 நிறுவனங்களிடமும் அடுத்த வாரம் வரை வினியோகிக்கும் அளவுக்கு சிலிண்டர்கள் இருப்பு உள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி சிலிண்டர் வினியோகத்தில் வீடுகளுக்கு முதல் முன்னுரிமை வழங்க வேண்டும். அடுத்து அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி விடுதிகள், அரசு, தனியார் மருத்துவமனைகள், காலை உணவு, சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க உங்கள் ஒத்துழைப்பு தேவை. இவை தவிர, சிலிண்டர் வினியோகத்தில் ஏற்ற இறக்கம் இருப்பதால், மாற்று ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக மின்சார அடுப்பு (இண்டக்ஸன் ஸ்டவ்) தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். விறகு வைத்து சமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்துள்ளோம்.

எனவே இதில் லாபநோக்கின்றி, மனிதநேயத்தோடு செயல்பட வேணடும். சிலிண்டர்களை செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தினாலோ, பதுக்கினாலோ போலீசார் மூலம் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

பின்னர் எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் சிலிண்டர்கள் இருப்பு நிலை, சமீபத்தில் வழக்கத்திற்கு மாறாக சிலிண்டர் புக்கிங் செய்கின்றனரா எனக்கேட்டு, தட்டுப்பாடை சமாளிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

அங்கன்வாடியில் பிரச்னை இல்லை /// அங்கன்வாடி திட்ட அதிகாரி ஷீலாராணி கூறியதாவது: மாவட்டத்தில் 17 வட்டாரங்களில் 2001 மையங்கள் உள்ளன. இவற்றில் 572 மையங்களில் சிலிண்டர்கள் முடியும் நிலையில் உள்ளன. 176 மையங்களில் நேற்று முன்தினம் 'புக்' செய்துள்ளனர். இவற்றில் 50 சதவீதம் அளவுக்கு சிலிண்டர் வந்துவிட்டது. வீடுகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு தட்டுப்பாடு வராத அளவுக்கு 156 மின்சார அடுப்பு (இண்டக்ஸன் ஸ்டவ்) களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். இவற்றை 30 தொகுப்பு மையங்களாக (கிளஸ்டர்) பிரித்து அவற்றை எளிதாக கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம். எனவே எங்குமே பிரச்னை என்பது கிடையாது. திருமங்கலத்தில் சிலிண்டர் தரமறுக்கவில்லை. மையங்களில் இருந்து செக் கொடுத்த பின்பே சிலிண்டர் வழங்குவர். இம்முறை செக் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அதற்கு பதிலாக அதிகார பூர்வ கடிதத்தையும், தொகையையும் கொடுத்து சிலிண்டர் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரச்னை என்பது எழவில்லை என்றார்.








      Dinamalar
      Follow us