நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, மே 7-
மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில் 'கோடை கொண்டாட்டம்' மே 1 முதல் 10 வரை நடந்து வருகிறது.
இதில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று கதை எழுதுதல் பயிற்சி, முத்துலட்சுமண ராவ் குழுவினரின் தோற்பாவைக்கூத்து நடந்தது. தனிமனித ஒழுக்கம் முதல் ராமாயணம் வரை காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.