ADDED : மே 04, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சண்டிகரில் நடந்த 2 வது தேசிய அளவிலான இந்திய ஓப்பன் தொடர்ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றனர்.
20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணி சார்பில் சந்திரா குமார், ஹர்ஷிதா, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி மாணவி மாரிச்செல்வி, லேடிடோக் கல்லுாரி மாணவி புனிதா பங்கேற்றனர். 4 X 400 தொடர் ஓட்டத்தை 3:47:25 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றனர்.

