sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு பழங்குடியினர்  பள்ளிகளில் ரூ.156 கோடியில் வசதிகள்  உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

/

அரசு பழங்குடியினர்  பள்ளிகளில் ரூ.156 கோடியில் வசதிகள்  உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

அரசு பழங்குடியினர்  பள்ளிகளில் ரூ.156 கோடியில் வசதிகள்  உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

அரசு பழங்குடியினர்  பள்ளிகளில் ரூ.156 கோடியில் வசதிகள்  உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்


ADDED : ஆக 24, 2025 04:15 AM

Google News

ADDED : ஆக 24, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.156 கோடியே 64 லட்சத்து 65 ஆயிரத்து 14 அனுமதிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு தெரிவித் ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.

கடையநல்லுார் அருகே புளியங்குடி பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்திலுள்ள அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளுக்கு போதிய கட்டடம், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களின் போக்குவரத்திற்கு வாகன வசதி செய்ய வேண்டும். குறித்த காலத்திற்குள் பள்ளிகளுக்குச் செல்லத் தவறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய ஆசிரியர்களை நியமிக்க தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தபோது மனுதாரர் இறந்துவிட்டார். இதை தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சகா, அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகினர்.

பழங்குடியினர் நல இயக்குனரக இணை இயக்குனர் (உதவித்தொகை) தாக்கல் செய்த அறிக்கை: 2019--20 முதல் 2025-26 வரை அரசு பழங்குடியினர் உறைவிட பள்ளிகளில் குடிநீர், சுற்றுச்சுவர் கட்டுமானம், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.156 கோடியே 64 லட்சத்து 65 ஆயிரத்து 14 அனுமதிக்கப்பட்டது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தொடர்ந்து நிதி அனுமதிக்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

பணியை தனி 'போர்டல்' மூலம் அரசு கண்காணிக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள், 'மனுதாரர் சுட்டிக்காட்டிய குறைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us