ADDED : அக் 28, 2024 04:35 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தார். தாளாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். காருண்யா பல்கலை பேராசிரியர் கிளமென்ட் சுதாகர், 125 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
முதல்வர் மேரி கனக சாரதா உறுதிமொழி வாசிக்க, பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆட்சிக்குழு உறுப்பினர் ஞானந்தராஜா நன்றி கூறினார்.
