ADDED : ஏப் 07, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
கோட்ட செயற் பொறியாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மின் நுகர்வோரிடமிருந்து மின் கட்டண குறைபாடு, பழுதான மின் மீட்டர், மின் கம்பம் மாற்றி அமைப்பது, குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட 87 மனுக்கள் பெறப்பட்டன. உதவி செயற்பொறியாளர்கள் அசோக்குமார், சவுந்திரபாண்டி, அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

