sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குரு வழிபாடே சனாதன தர்மம்

/

குரு வழிபாடே சனாதன தர்மம்

குரு வழிபாடே சனாதன தர்மம்

குரு வழிபாடே சனாதன தர்மம்


ADDED : ஜன 09, 2024 05:46 AM

Google News

ADDED : ஜன 09, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை ; ''குரு வழிபாடே சனாதன தர்மம்'' என மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் நடந்த காஞ்சி மஹா பெரியவரின் ஆராதனை வைபவத்தில் சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசினார்.

நாம சங்கீர்த்தன கலைஞர் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லுாரி முதல்வர் தியாகராஜன், சொற்பொழிவாளர் சீனிவாசனுக்கு மஹா பெரியவா விருதினை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

'நடமாடும் தெய்வம்' என்ற தலைப்பில் சீனிவாசன் பேசியதாவது: ஹிந்து சமயத்தில் இறை வழிபாட்டை விட குரு வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதே மரபு. காஞ்சி மஹா பெரியவர் வாழ்நாளில் பாரதம் முழுவதும் நடந்து சென்று தர்மத்தை நிலைநாட்டினார். அவரை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிவதோடு எந்த சூழ்நிலை இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதில் கவனம் செலுத்தினார். மகான்கள் நடமாடும் தெய்வங்களாக உள்ளனர்.

ஹிந்து சமயத்தில் எல்லா கடவுள்களையும் குருவாகவே வழிபடுகிறோம். எந்த தலத்திற்கு சென்றாலும் இரவு தங்கி விடியற்காலையில் நீராடி வழிபடுவதன் மூலம் இறைவனே குருநாதராக வருகிறார் என்பார் தாயுமானவர். தற்போது பல கோயில்களில் புனித தீர்த்தக்குளங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.மகான்கள், மனிதர்களுக்கு செய்யும் சேவையே மகேஸ்வரனுக்கு செய்யும் சேவையாக நமக்கு சொல்லித் தருகின்றனர். நாமும் மனித வடிவில் இருக்கும் குருநாதர்களை வழிபாடு செய்து மனித குலத்திற்கு சேவை செய்து சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாண வைபவம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us