/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ்சின் பின்பகுதியில் 'தொங்கல் பயணம்'
/
பஸ்சின் பின்பகுதியில் 'தொங்கல் பயணம்'
ADDED : டிச 16, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு தாழ்தள அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. கூத்தியார்குண்டு பஸ் ஸ்டாப்பை கடந்தபோது பஸ்சின் பின்புறம் கைலி அணிந்த ஒருவர் தொங்கியபடி பயணித்தது தெரிந்தது.
பயணிகள் சத்தமிடவே, டிரைவர் பஸ் வேகத்தை குறைத்தார். இதை பயன்படுத்தி அந்நபர் தப்பி ஓடினார். மனநலம் பாதித்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

