ADDED : மார் 07, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில்
கம்யூட்டர் ஹார்டுவேர் நெட்வொர்க்கிங் பயிற்சி மற்றும் ஜாவா பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டு பயிற்சிகளுக்கும் தனித்தனியாக தியரி மற்றும் பிராக்டிக்கல் கற்றுக் கொடுக்கப்படும்.
பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கு இலவசம், இதர பிரிவினருக்கு குறைந்த கட்டணம். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், ஜாதிச் சான்றிதழுடன் நேரில் பதிவு செய்ய வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அலைபேசி : 86956 46417.

