ADDED : மார் 15, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற சுகாதார நடை பயண நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி தலைவர் முகமது யாசின் துவக்கி வைத்தார். 8 கி.மீ., நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், நகராட்சி கமிஷனர் சண்முகம், மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன், டாக்டர் பிருந்தா, நகராட்சி துணைத்தலைவர் இளஞ்செழியன், சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
