ADDED : மார் 05, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு துறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'ஹெர்பல் டீ' இலவசமாக வழங்கப்படுகிறது.
துறைத்தலைவர் நாகராணி நாச்சியார் கூறியதாவது:
கொரோனா தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக 'இம்யூனிட்டி பூஸ்டர்' மருந்து வழங்கப்பட்டது. இதில் மஞ்சள், மிளகு, துளசி, அதிமதுரம், சுக்கு அரைத்து பொடியாக்கப்பட்டுள்ளது. அதிமதுரம் சேர்த்திருப்பதால் பொடி லேசான இனிப்புச்சுவையுடன் இருக்கும். நுரையீரல் பிரச்னை, இருமல், சளி, காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். ஒருவருக்கு 100 கிராம் பாக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு டேபிள் ஸ்பூன்அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். செரிமான பிரச்னையை சரிசெய்கிறது என்றார்.
