/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 31, 2025 07:22 AM
மதுரை:இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடும்படி தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். படகுகள், வலைகளை சேதப்படுத்துகின்றனர். பத்து ஆண்டுகளில் 1,500 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்கும் தீர்மானத்தை தமிழக அரசு 2013 ல் சட்டசபையில் நிறைவேற்றியது. அதை மத்திய அரசுக்கு அனுப்பியும் மேல் நடவடிக்கை இல்லை.
இந்தியா, இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது, படகுகள், வலைகளை பறிமுதல் செய்வதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இது நீதித்துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது.
உரிய முறையில் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மத்திய அரசின் பொறுப்பு. மனுவில் கோரிய நிவாரணம் ஏற்புடையதல்ல.
மனுதாரர் இப்பிரச்னைகளை புரிந்துகொண்ட போதிலும், தொந்தரவு தரும் வகையில் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார். தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

