sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பதிவு பெறாத ஜாதி கட்சிகளை தடை செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

பதிவு பெறாத ஜாதி கட்சிகளை தடை செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு பெறாத ஜாதி கட்சிகளை தடை செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு பெறாத ஜாதி கட்சிகளை தடை செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : ஜன 11, 2025 05:07 AM

Google News

ADDED : ஜன 11, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தேர்தல் கமிஷனில் முறையாக பதிவு பெறாத ஜாதி கட்சிகள், சட்டப்படி செயல்படாத ஜாதி சங்கங்களை தடை செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

நவீன யுகத்திலும் தீண்டாமை உருமாற்றம் பெற்று வன்கொடுமையாக மாறுகிறது. அனைத்து சமூகங்களிலும் சிலர் சுயநலனிற்காக அவர்கள் சார்ந்துள்ள ஜாதியின் பெயரால் ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர். அதை தேர்தல் கமிஷனில் முறையாக பதிவு செய்வதில்லை. தேர்தலிலும் போட்டியிடுவதில்லை.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சார்ந்து செயல்படுகின்றனர். வாழ்வாதாரத்தை பெருக்க பொதுவெளியில் வெறுப்பு பேச்சுகளால் இளைஞர்களிடம் வன்மத்தை துாண்டுகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் 'யு யூடிப்' சேனல்களை உருவாக்கி வெறுப்புணர்வை துாண்டி சமூக அமைதியை சீர்குலைக்கின்றனர். ஜாதிகளின் பெயரில் சங்கங்களை உருவாக்குவோரில் சிலர், விதிகள்படி செயல்படுவதில்லை.

ஆண்டறிக்கை தாக்கல் செய்வதில்லை. பெயரளவிற்கு பதிவு செய்து கொண்டு பிற சமூகத்தினரை இழிவுபடுத்தி வெறுப்புணர்வை விதைக்கின்றனர். இதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. நடவடிக்கை இல்லை.

தேர்தல் கமிஷனில் முறையாக பதிவு பெறாத, தேர்தலில் போட்டியிடாத அனைத்து ஜாதி கட்சிகள், சங்க பதிவு சட்டப்படி முறையாக செயல்படாத ஜாதி சங்கங்கள், ஜாதி சார்ந்து செயல்படும் 'யு யூடிப்' சேனல்களை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தமிழக உள்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர்கள், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு பிப்.19 க்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us