/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அஜித்குமார் மரண வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
அஜித்குமார் மரண வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 06, 2026 05:58 AM
மதுரை: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்தார். கண்ணன் உள்ளிட்ட 6 போலீசார் கைதாகினர்.
மானாமதுரை டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ.,சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். ரமேஷ்குமார் உட்பட 4 பேரும் மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி முன் நேற்று ஆஜராகினர்.
இவர்களை விசாரணை முடியும்வரை காவலில் வைக்க வேண்டும் என நீதிபதி கருத்து வெளியிட்டார். ரமேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சி.பி.ஐ.,மார்ச் 12 ல் பதில் மனு தாக்கல் செய்யும்வரை, வழக்கை கீழமை நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

