sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஸ்ரீவில்லிபுத்துார் சாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஸ்ரீவில்லிபுத்துார் சாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் சாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் சாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூலை 31, 2025 11:18 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீசாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரு நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க விருதுநகர் மாவட்ட வன அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:

ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை வனப்பகுதியில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலில் ஆக., மாதம் ஐயப்பனை வழிபடும் பழக்கம் கடந்த 200 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதை முன்னிட்டு 7 கிராம முதியவர்களும் இரண்டு நாட்களை தேர்வு செய்து கோயிலில் வழிபாடுகள், திருவிழாக்களை நடத்துவர்.

கடந்த ஆண்டு மேகமலை வனப்பகுதியில் தங்கி வழிபட தடை விதிக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆக., 8, 9ல் வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

அரசு தரப்பில், ''புலி நடமாட்டம் இருப்பதால் இரவில் தங்க அனுமதி வழங்க இயலாது'' என தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் மனுவை இரு நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க விருதுநகர் மாவட்ட வன அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு பைசல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us