sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடிவாசல் அருகே குடிநீர் தொட்டிக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

/

வாடிவாசல் அருகே குடிநீர் தொட்டிக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாடிவாசல் அருகே குடிநீர் தொட்டிக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாடிவாசல் அருகே குடிநீர் தொட்டிக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 07, 2025 05:38 AM

Google News

ADDED : ஆக 07, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிரான பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

அலங்காநல்லுார் ஒன்றிய பா.ஜ.,தலைவர் இருளப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு:

அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கும் அரங்கின் வாடிவாசல் அருகில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஜல்லிக்கட்டு குழுவினருடன் கலந்தாலோசிக்கவில்லை. பொது அறிவிப்பு வெளியிடவில்லை. அது நெரிசலான இடம். தொட்டி அமைப்பதால் ஜல்லிக்கட்டு நடத்தும்போது கூட்ட நெரிசல் ஏற்படும்.

வாடிவாசல் அருகே பின்புறம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க தடை விதிக்க வேண்டும். மாற்று இடத்தை தேர்வு செய்து அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

அரசு பிளீடர் திலக்குமார்: பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்காக நத்தம் நிலத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடையூறு ஏற்படாது என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மக்கள் பயன்பாட்டிற்காக அரசு நிலத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது.

இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us