sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் நிலத்தை மாநகராட்சி ஆக்கிரமித்ததாக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கோயில் நிலத்தை மாநகராட்சி ஆக்கிரமித்ததாக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தை மாநகராட்சி ஆக்கிரமித்ததாக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தை மாநகராட்சி ஆக்கிரமித்ததாக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 13, 2025 11:40 PM

Google News

ADDED : மே 13, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும் அகற்ற நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், கலெக்டர் பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அழகர்கோவில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில் துணை கமிஷனர் தாக்கல் செய்த மனு: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமாக தல்லாகுளத்தில் குறிப் பிட்ட சர்வே எண்களிலுள்ள நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது.

சாலை அமைத்தல், கட்டுமானங்கள் மூலம் தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அந்நிலத்தை வில்லங்கப்படுத்த அல்லது உரிமை மாற்றம் செய்யாமல் தடுக்க வேண்டும். வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்து கோயில் பெயரில் பட்டா வழங்கக்கோரி கலெக்டர், டி.ஆர்.ஓ., மதுரை வடக்கு தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு: அறநிலையத்துறை சட்டம் அல்லது 1990 ல் சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாமல், பொது பயன்பாட்டிற்கான சாலையாக மாற்ற மாநகராட்சி தரப்பு முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க முடியாது.

மாநகராட்சி தரப்பு: அது அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது பொது நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

மனுதாரர் தரப்பு கூறுவது நிலைக்கத்தக்கதல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கலெக்டர் தரப்பு: மனுதாரரின் மனு சிவில் நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவு அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள்: மாநகராட்சி கமிஷனர், வடக்கு மண்டலம் உதவி கமிஷனர் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

சிவில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மனுதாரரின் மனுவை கலெக்டர் பரிசீலிக்க வேண்டும்.

அவர் முடிவெடுக்கும்வரை பொது நோக்கத்திற்காக சொத்தினை வில்லங்கப்படுத்த அல்லது உரிமை மாற்றம் செய்ய கூடாது என மாநகராட்சி கமிஷனர், உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.

வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us