sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி பாடத்தில் குழந்தைகள்பாதுகாப்புச் சட்டம் இடம் பெற வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பள்ளி பாடத்தில் குழந்தைகள்பாதுகாப்புச் சட்டம் இடம் பெற வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி பாடத்தில் குழந்தைகள்பாதுகாப்புச் சட்டம் இடம் பெற வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி பாடத்தில் குழந்தைகள்பாதுகாப்புச் சட்டம் இடம் பெற வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : டிச 04, 2024 08:38 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் இடம்பெற தாக்கலான வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை செந்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பல வளர் இளம் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானாலும் வெளியில் சொல்லத் தயங்குகின்றனர். அதற்கு சட்ட விழிப்புணர்வு இல்லாததே காரணம்.கேரளா அரசின் பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகளின் உரிமைகள், அவரச உதவிக்கு போலீஸ் மற்றும் நிர்பயா இலவச உதவி எண் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், கடமைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), அவசர உதவிக்கு சைல்டு ெஹல்ப் லைன், போலீஸ் உதவி எண் இடம் பெற தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் விரைவில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us